Posts

Showing posts from July, 2018

பெண்களின் ஆரோக்கியம் காக்கும் பாரம்பரிய உணவு முறை..!!

Image
♥பெண்களின் ஆரோக்கியம் காக்கும் பாரம்பரிய உணவு முறை..!! ♥ பன்னெடுங்காலமாகப் பெண்கள் பூப்பு எய்திய பின் பிரத்யேகமான ஆரோக்கிய உணவு வகைகளைக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குக் கொடுப்பது வழக்கமாக இருந்துவந்தது. ♥இந்த ஆரோக்கியப் பழக்கம் தற்போது மறைந்துபோய், பெண் பூப்பு எய்திய அன்றைக்கு மட்டும் கொடுக்கும் சடங்காகச் சுருங்கிவிட்டது. ♥பூப்பு கால உணவுகளைச் சாப்பிடுவதன்மூலம் மலட்டுத்தன்மை நீங்கும்; சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும்; ♥கருப்பைக் கட்டிகள் வருவது தடுக்கப்படும்; கருப்பை நீக்கம் தேவைப்படாது என்பதே இந்தச் சித்த மருத்துவ உணவு முறையின் சிறப்பம்சம். பூப்பு காலச் சித்த மருத்துவ உணவு முறை: ♥தமிழ் மக்களிடம் பல நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த இந்த மகளிர் சித்த மருத்துவ உணவு முறையை, தினமும் ஒரு நேரமோ ஒரு வேளையோ உட்கொள்வது நல்லது. ♥இதில் எள் -உளுந்து -வெந்தயம் என்ற வரிசையை மாற்றக்கூடாது என்பது மிக முக்கியமானது. ♥ஆரோக்கியமான உணவின்மூலம் மாதவிடாய் நோய்கள் அண்டாத ஆரோக்கியமான குழந்தைகளைச் சமூகத்தில் பெருக்க இந்த உணவு முறை துணைச் செய்யும். ♥ஒரு நாட்டின் ஆரோக்கிய

வெள்ளப்படுதல் (Leucorrhea)

Image
வெள்ளப்படுதல் (Leucorrhea) 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 வெள்ளைப்படுகின்ற காலத்தில் பெண்கள் தங்களைத்தாங்களே வெறுத்துக்கொள்கின்ற நிலை உருவாகிவிடுகின்றது. அதனை சுத்தப்படுத்திக்கொள்ளக்கூட அசிங்கப்பட்டு ஒடுங்கிக்கிடக்கும் மன நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள் என்றால் அது மிகையாகாது. இந்த நிலையில் உடலுறவு கொள்ளும் ஆண்கள் மனைவியை வெறுத்துப்பேசும் மன நிலைக்கு சென்று விடுகின்றார்கள். சிலருக்கு துர் நாற்றம் வேறு. சித்தரவதைதான். 1. வெள்ளையோனிக்கு ஆனை நெருஞ்சி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 இந்த பழமொழி ஆனை நெருஞ்சியின் மகத்துவத்தினை மக்களுக்கு உணர்த்துகின்றது. இதன் இலை, காம்பு, காய் இவைகளை சற்றே நசுக்கி பசும்பால் அல்லது நீரில் கலந்து கையினால் சிறிது நேரம் சுற்றிச் சுற்றித் துழாவிக்கொண்டிருந்தால், ஒரு விதமான குழகுழப்பான திரவமாக வெளிப்பட்டு, பிசுபிசுப்பான திரவம் உண்டாகும். இதனுடன் பனைவெல்லம் கலந்து குடிக்க வெள்ளைப்படுதல் பெண்களுக்கு நிற்கும். ஆண்களுக்கு நீர்க்கடுப்பு, கனவில் விந்து வெளியேறல் நீங்கும். பசும்பாலைவிட வெள்ளாட்டுப்பால் கிடைத்தால் மிகவும் சிறப்பு. இவ்வாறு கரைத்து குழகுழப்பான திரவத்தினை தினமு

உடலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புக்களை 24 மணிநேரத்தில் வெளியேற்ற இதைக் குடிங்க

Image
உடலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புக்களை 24 மணிநேரத்தில் வெளியேற்ற இதைக் குடிங்க இஞ்சி கேரட் ஜூஸ் தயாரிப்பு முறை : எத்தனை கிளாஸ் வேண்டுமோ அதற்கேற்ப கேரட் எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே ஒரு கிளாஸ் இஞ்சி கேரட் ஜூஸ் செய்யும் முறை விளக்கப்பட்டிருக்கிறது. ஒரு கேரட் எடுத்து நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை சிறிது சிறுதாக நறுக்கி அரைத்து பேஸ்டாக்க வேண்டும்.பின்னர் அதில் ஒரு இன்ச் அளவுள்ள இஞ்சியை சேர்த்து அரைக்க வேண்டும். அதனை அப்படியே கிளாஸில் ஊற்றலாம். அல்லது வடிகட்டியும் ஊற்றலாம்.இஞ்சியை அப்படியே அரைப்பதற்கு பதிலாக இஞ்சிச் சாறு எடுத்தும் சேர்க்கலாம். உடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகுத்தூளைச் சேர்த்து பருகலாம். (வெள்ளைச் சர்க்கரை, கூடுதலான தண்ணீர் சேர்க்க வேண்டாம்.) கண்கள் : கேரட்டில் இயற்கையாகவே பீட்டா கரோட்டீன் நிறைந்து காணப்படும். இவை நம் கண்களுக்கு மிகவும் நல்லது. உடன் இஞ்சியும் சேர்ந்திருப்பதால் அதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நச்சுக்களை வெளியேற்ற உதவிடும். இருமலுக்கு : சாதரண காய்ச்சல் மற்றும் இருமலைப் போக்குவதில் முக்கியப் பங

வாய்ப்புண் ஏன் வருகிறது? அதற்கான இயற்கை மருத்துவம்...!

Image
வாய்ப்புண் ஏன் வருகிறது? அதற்கான இயற்கை மருத்துவம்...! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக்  குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். நாளடைவில் சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும், காய்ச்சல் வரும், உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும். வாய்ப்புண் காரணங்கள்:  ====================== ஸ்ட்ரெஸ், மன அழுத்தம் பேக்டீரியா, புஞ்சனம், வைரஸ் இவற்றாலும் உண்டாகிறது. வைட்டமின் ‘பி’ சத்துக் குறைவாலும், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்களாலும் ஏற்படுகிறது. சிக்ரெட், பீடி புகைக்கும் பழக்கம் இருந்தாலும் வாய்ப்புண் ஏற்படும். வாய்ப்புண்கள் தொடர்ந்து நீண்ட நாட்கள் காணப்பட்டால் புற்று  நோயாக மாறவும் சந்தர்ப்பங்கள் உண்டு. இதனால் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும் வாயில் துர்நாற்ற்றம் ஏற்படும்.   ஆண்களைவிடப் பெண்களுக்கு,

*நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!*

Image
*நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!* 1. *நெஞ்சு சளி* தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. *தலைவலி* ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. *தொண்டை கரகரப்பு* சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. *தொடர் விக்கல்* நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. *அஜீரணம்* ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.  அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியட

காஞ்சிபுரம் இட்லி

Image
காஞ்சிபுரம் இட்லி    தேவையானப் பொருட்கள் : இட்லி (புழுங்கல்) அரிசி - 2 கப் உளுத்தம் பருப்பு - 1 கப் மிளகு - 2 டீஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் சுக்கு பொடி - ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை தேங்காய் (பொடி பல்லு பல்லாக நறுக்கியது) - 1/2 கப் முந்திரி பருப்பு (சிறு சிறு துண்டுகளாக ஒடித்தது) - 1 டேபிள்ஸ்பூன் நெய் - 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு செய்முறை: அரிசியையும், உளுத்தம் பருப்பையும் தனித்தனியாக தண்ணீரில் 5 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் போட்டு இட்லிக்கு அரைப்பது போல் மிருதுவாக அரைத்து, உப்பு போட்டு கலந்து, இரவு முழுதும் புளிக்க விடவும். மறு நாள், ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு அதில் முந்திரி பருப்பு, சுக்குப் பொடி (சுக்குப்பொடி இல்லையென்றால், சிறு இஞ்சித் துண்டைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும்) இரண்டையும் போட்டு, முந்திரி சிவக்கும் வரை வறுத்து மாவில் கொட்டவும்.  அதே வாணலியில் நல்லெண்ணையை விட்டு, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை முழுதாகவும், மற்றொரு டீஸ்பூன் மிள

புளியோதரைப் புராணம்

Image
புளியோதரைப் புராணம் ரெஃப்ரிஜிரேட்டர் கண்டு பிடிக்கும் முன்பே தமிழன் “வச்சு வச்சு” சாப்பிட்டது புளி சாதத்தைத் தான்.! ஒரு வாரம் ஆனாலும் கெடாது.! அக்காலத்தில் வெளியூர் பயணங்களில் நம் கால்களே டாக்சியாக இருந்த காலத்தில் நம் பாட்டன்களின் பசியைப் போக்கிய வழிச் சோறு என்பது புளிச் சோறே! என்பது 100% உண்மை.! எப்போதும் சுவை மிகுந்த உணவுகளின் பட்டியலில் டாப் 5 இல் இடம் பிடிக்கக் கூடிய ஒரு உணவு புளியோதரை.! உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என அறு சுவைகளும் உள்ள உணவு புளியோதரை.. இதன்  நிறத்திலேயே அதன் தரத்தை அறிந்துவிடலாம்.. இதன் புராணம் மிகச் சுவையானது! புளியோதரைக்கு மணமும் நிறமும் இரு கண்கள்.. முதலில் புளியோதரைக்கு வடிக்கும் சாதத்தின் பதம் மிக முக்கியம்.. அது புதுமணத் தம்பதியர்  போல பின்னிப் பிணைந்து குழைந்து இராமல்.. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன தம்பதிகள் போல சற்று ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் பதமே சாலச் சிறந்தது.. அடுத்து நிறம்.! புளியோதரை ஆழ்ந்த மஞ்சளில் இருப்பது மிகச்சிறப்பு.! சாதத்தை வடித்து ஆறவிட்டு பயன்படுத்துதல் புளியோதரைக்கு சரியான சமையல் முறையாகும்.. அடுத்

திருநெல்வேலி_அல்வா

Image
திருநெல்வேலி_அல்வா... தேவையானபொருள்கள்... சம்பா கோதுமை – 200 கிராம் சர்க்கரை – 750 கிராம் நெய் – 400 கிராம் முதலில் சம்பா கோதுமையை எடுத்து நன்றாக சுத்தம் செய்த பின் , தண்ணீரில் முதல் நாளே ஊறவைக்க வேண்டும். பின்பு கிரைண்டரில் நல்ல நைசாக அரைக்க வேண்டும். அது நன்றாக அரைக்க அரைக்க கோதுமை பாலாக வர ஆரம்பிக்கும். அதன் பின் அதை ஒரு துணியில் வடிகட்ட வேண்டும். அந்த பாலை நல்ல கனமான வாணலியில் சூடாக்க  வேண்டும். பால் லேசாகச் சூடானதும், சர்க்கரைச் சேர்த்துக் கிளற ஆரம்பிக்க வேண்டும். அதன் பின் கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெய்யைச் சேர்த்துக் கிளற வேண்டும். இறுதி வரை நாம் அந்த கலவை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.  சிறிது நேரத்தில் அல்வா நல்ல குங்குமச் சிவப்பு  நிறமாக மாறும். அல்வா நன்கு இறுகலான பக்குவத்தில், மற்றும்  பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி, ஆறவைத்தவுடன் சுவையான அல்வா ரெடி...

அடை

Image
அடை கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்துக்கொள்ளவும். இதனுடன், தோலுடன்கூடிய முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை தலா 4 டீஸ்பூன் அளவுக்குச் சேர்க்கவும். இவற்றை காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.  நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும். இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி, அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி, இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை ரெடி!

அற்புத மருத்துவக் குணம் கொண்ட பேரிக்காய்...!

Image
அற்புத மருத்துவக் குணம் கொண்ட பேரிக்காய்...! பேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இதய படபடப்பு மற்றும் இதயம் பலவீனமானவர்கள் தினம் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல்  இதற்கு உண்டு. மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களையும் சரி செய்யும் தன்மை இதற்கு உண்டு.   பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே! பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து  நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயணங்கள் இன்சுலின் உணர்திறனை  மேம்படுத்துகிறது. மேலும், மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும், குடல் புண்ணுக்கும் இது சிறந்த நிவாரணியாகும். கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தை நல்ல வளர்ச்சி பெற உதவி