கொங்கு முதலியார் மீன் குழம்பு

கொங்கு முதலியார் மீன் குழம்பு

இந்த குழம்பில் தேங்காய் இல்லாத காரணத்தால் அவ்வளவு சீக்கிரம் கெட்டு விடாது. குழம்பை சூடு செய்தாலே போதும்.

தேவையான பொருட்கள்
மீன் 300 கிராம்
எண்ணெய் 1/2 கப்
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி
வெந்தயம் 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கைப்பிடி
தக்காளி 1 பெரியது ( பொடியாக நறுக்கியது )
கொத்தமல்லி தூள் 2 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
பூண்டு 8 பற்கள்
சின்ன வெங்காயம் 12
பச்சை மிளகாய் 5
காஷ்மீரி மிளகாய் தூள் 3 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
புளி 1 எலுமிச்சை அளவு
உப்பு தேவையான அளவு
தண்ணீர் 2 கப்

செய்முறை
1. புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து புளி கரைசலை எடுக்கவும். நன்றாக பிழிந்து புளிச்சாற்றினை எடுக்கவும்.

2. இப்பொழுது மன் வடசட்டியை எடுத்து வைக்கவும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் , வெந்தயம் , கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

3. வடசட்டியில் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

4. பின்னர் வடசட்டியில் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். அதில் மஞ்சள்தூள், கொத்தமல்லி தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து நன்கு வதக்கவும்.

5. இந்த சமயத்தில் கழுவி வைத்துள்ள மீன் துண்டங்களை சேர்த்து இந்த மசாலா கலவையில் சேர்த்து கிளறவும்.

6. இப்பொழுது கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றவும் நன்கு கலக்கவும். பிறகு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.

7. 5 நிமிடங்கள் கழித்து சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் , பூண்டு சேர்த்து அரைத்து வடசட்டியில் இடவும். இப்பொழுது கொதிக்க விடவும்.

8. 15 நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க விடவும். பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

Comments

Popular posts from this blog

கோயம்புத்தூர் சிக்கன் சுக்கா

Increase Instagram Followers Best App